கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் தகவல்களை திரட்டும் பொலிஸ்!

கொழும்பு மாவட்டத்தில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கையை பொலிசார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு மத்தி, வடக்கு, தெற்கு, நுகேகொட மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் 17 பிரிவுகள், 60 கிராம சேவர்கள் பிரிவுகளில் தற்காலிமாக தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் கடந்த 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இதுவரை தற்காலிமாக தங்கிருக்கும் 37867 பேரின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!