பொலிசாரின் நடத்தையில் பாரபட்சம்! – மஹிந்த தேசப்பிரிய

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச்சடங்கிலும் கொழும்பில் முன்னணி சோசலிச கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பொலிஸார் நடந்து கொண்ட விதத்தில் முரண்பாடு உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேற்படி இரண்டு நிகழ்வுகளிலும் பொலிஸாரின் மாறுபட்ட செயற்பாடு தொடர்பில் நாட்டில் கருத்து உள்ளதாக தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் பொதுமக்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!