மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவர்கள் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்தில் மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்து வந்த நான்கு இளைஞர்கள், நேற்று தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் மாணவிகள், பெண் பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள் நால்வரே, நேற்று மாலை தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொல்லைக்குள்ளாகி வந்த மாணவிகள், பெண் பிள்ளைகளின் உறவினர்களே, குறித்த இளைஞர்களைப் பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!