குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பிய பெண்ணுக்கு, மீண்டும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம்- கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மேற்படி பெண், குவைததில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். வீடு சென்ற பின்னர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!