லண்டனில் நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சகோதரிகள்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

சற்று நேரத்தில் தாங்கள் கொல்லப்படப்போவது தெரியாமல் நடனமாடும் சகோதரிகள் இருவரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வடமேற்கு லண்டனிலுள்ள பூங்கா ஒன்றில் Bibaa Henry (46)மற்றும் Nicole Smallman (27) Bibaaவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். நண்பர்கள் பார்ட்டி முடிந்து அங்கிருந்து சென்றபின், யாரோ ஒருவர் சகோதரிகள் இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்தவர் ஒரு ஆணாக இருக்கும் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள் சகோதரிகள் இருவரும் தங்கள் நண்பர்கள் சென்றபின் மொபைல் போனில் உள்ள ஒளியை பயன்படுத்தி இசைக்கு நடனமாடும் புகைப்படம் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அந்த ஒளிதான் கொலைகாரனை ஈர்த்திருக்கும் என பொலிசார் கருதுகிறார்கள்.

இந்நிலையில், மகள்கள் இருவரையும் பறிகொடுத்த பெற்றோர், தங்கள் வாழ்வே சூனியமாகிப்போனதாகவும், ஒவ்வொரு நாளும் தங்கள் மகள்களைக் குறித்து கலங்கிக்கொண்டிருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். பொலிசார் குற்றவாளியை பிடிக்க பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!