கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் பிரேசில்!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 87 லட்சத்து 50 ஆயிரத்து 882 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 36 லட்சத்து 68 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 791 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 46 லட்சம் 20 ஆயிரத்து 378 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 818 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பிரேசிலில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 1,21,407

பிரேசில் – 49,090

இந்தியா – 12,573

இங்கிலாந்து – 42,461

ஸ்பெயின் – 28,15

இத்தாலி – 34,561

மெக்சிகோ – 19,747

பிரான்ஸ் – 29,617

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!