ஐதேக உறுப்புரிமை நீக்கத்துக்கு தடைவிதிக்க மறுப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி 99 உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு எடுத்த முடிவுக்கு எதிராக, இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட 99 உறுப்பினர்களை இடைநிறுத்தும் முடிவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான், அமலி ரணவீன, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!