அமெரிக்காவுடனான எம்சிசி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
எம்சிசி அல்ல வேறு பெயரில் வந்தாலும் உடன்படிக்கையை எதிர்க்கும் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலாக, நாட்டின் நீதித்துறைக்கு பொறுப்புக் கூறாத மற்றும் இலங்கை சட்டத்தை மீறி செல்லும் நிலைமையை உருவாக்கும் உடன்படிக்கை எந்த பெயரில் கொண்டு வரப்பட்டாலும் அதனை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!