ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு – யாழில் சஜித்

ஒருமித்த நாட்டிற்குள் அரசியலமைப்பை தாண்டிய அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நுண் கடனினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சிறப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்து அதனூடாக நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளேன்.

அதேபோன்று வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன். கிராமிய மற்றும் நகர நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தமது பிரதேச அபிவிருத்திகளை அந்த மக்களே தீர்மானிக்க கூடிய வகையிலான திட்டத்தை உருவாக்குவேன்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13வது அரசியலமைப்பை பாதுகாத்து செயற்படுவேன். ஒருருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபையும் என்னால் பாதுகாக்கப்படும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!