புலிகளின் கொடிகள், ஆவணங்கள் சிக்கின!

முல்லைத்தீவு- மாத்தளன் பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை ஒன்றின் போது, விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் மற்றும் கொடிகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாத்தளன் பகுதியில் உள்ள காணி ஒன்றுக்குள் இருந்த வீட்டினுள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று இராணுவத்தினர் மாத்தளன் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, விடுதலைப்புலிகளின் இலச்சினைகள் பதிக்கப்பட்ட துண்டுகள் மற்றும் கரும்புலிகளின் சின்னம் அச்சிடப்பட்ட துணிகள், தமிழீழ வரைபட புத்தகம், தமிழீழ வைப்பகத்தின் சிறுவர்களுக்கான தளிர் சேமிப்பு கணக்கு புத்தகம், ஒளிப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!