செயலணியில் சிறுபான்மையினர் இல்லை – காற்றில் பறந்தது அரசின் வாக்குறுதி!

கிழக்கு தொல்பொருள் முகாமைத்து செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தலைமையிலான இந்த செயலணியின் உறுப்பினர்களாக எல்லாவல மேதானந்த நாயக்க தேரர், பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திசாநாயக்க, காணி பணிப்பாளர் நாயகம் சந்திரா ஹேரத் உள்ளிட்ட 11 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எனினும், இந்தச் செயலணியில் சிறுபான்மையின மக்களின் சார்பில் பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை. சிறுபான்மையின பிரதிநிதிகள் இருவர் உள்ளக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!