யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்கள் உறுதி!- அடித்துச் சொல்கிறார் சரவணபவன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ இம்முறை 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும். உள்ளுக்குள் சில உரசல்கள் நடந்தாலும், இலக்கில் அனைவரும் ஒன்றாகத்தான் நிற்கிறோம்.

ஐ.தே.கவுக்கு இருந்த வாக்குகள் இரண்டாகப் பிரியும். சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள். ஆயினும் அவர்களின் வாக்கை டக்ளஸ், வாசுதேவின் கட்சிகள் பங்கிட்டுக் கொள்ளும்.

விக்கினேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து சென்றவர் என்பதால் அங்குதான் சிறிய உடைவு வரும். எனினும் அது பாதகமல்ல. தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பவர் மனநிலை என்றும் மாறாது.

இம்முறை 7 ஆசனங்களையும் நாங்கள் பெறுவோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!