இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 674 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுக்குள்ளான 2,012 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!