ராஜித உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 28ம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!