எகிப்தில் 2-வது திருமணம் செய்வதற்காக குடும்பத்தையே எரித்துக்கொன்ற நபர்: உண்மையை போட்டுடைத்த 4 வயது மகள்!

எகிப்தில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொலை செய்துவிட்டு வீட்டையே கொளுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். எகிப்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமான மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள தயார் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்துள்ளார் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்.

தன் வீட்டில் இருந்த தாய், மனைவி, 3 மகள்களை கொலை செய்துள்ளார். நான்காவது மகளை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். அதில் அவர் மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த அந்த தந்தை கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு வீட்டிற்கே தீயை வைத்துள்ளார். இதனிடையே வீட்டிலிருந்து தப்பித்த அந்த 4 வது மகள் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் தெரிவிக்க இந்த கொடூர சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

இரண்டாவது திருமணத்திற்காக குடும்பத்தில் உள்ள 5 பேரை கொலை செய்துவிட்டு வீட்டிற்கே தீ வைத்த சம்பவம் எகிப்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை. காவலில் எடுக்கப்பட்டு அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மட்டும் பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் இவர் திருமணம் செய்ய திட்டமிட்ட பெண்ணின் தூண்டுதல் ஏதும் உள்ளதா என்பது தொடர்பில் வுசாரிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!