நாடு முழுவதும் பிசிஆர் சோதனை!

நாடு முழுவதும் எழுமாற்றாக பிசிஆர் சோதனைகளை நடத்தவுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பரவிய தொற்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்படும். கொழும்பு மாநகர சபையில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என பல இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன , இங்கு கந்தகாடு தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் கூறியுள்ளா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!