பயங்கரவாத தாக்குதல்; சிஐடியில் ரிஷாட் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) கிளை காரியாலயத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

வவுனியா – இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள சிஜடி கிளை காரியாலயத்திலேயே அவர் முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து நீதிமன்ற உத்தரவில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக சிஐடியால் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!