அடுத்த கட்டத்தில் சஜித் வெளியேற்றப்படுவார்!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை இரண்டாவது கட்டமாக வெளியேற்றவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் 54 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் செயற்கழு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களின் பெயர்கள் இருக்கவில்லை.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்று கருத்து வெளியிடுகையில், சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் இரண்டாவது கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!