தேசிய அரசாங்கம் தம்மை ஆட்சிக்கு கொண்டு வந்த அனைத்து சர்வதேச சக்திகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்ட திருத்தம் குறித்து அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போதைய கூட்டணி அரசாங்கம் குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.
2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்கள் தொடர்பாக பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கும் சட்டத்தை திருத்துவதற்காக சட்டமூல நகல் பத்திரமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய அரசாங்கம் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த அனைத்து சர்வதேச சக்திகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சர்வதேச தலையீடுகளை பலப்படுத்த தீர்மானித்துள்ளது என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!