சுவிஸ் குமாரை விடுவித்தது ஸ்ரீகஜன் தான்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் அப்போது பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஸ்ரீகஜன் என்பவரால் விடுவிக்கப்பட்டார் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசெர அரசியல் பழிவாங்கலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

சுவிஸ் குமாரை தடுத்து வைத்து மருத்துவமனையில் சேர்க்குமாறு முன்னாள் மூத்த டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க பிறப்பித்த உத்தரவை மீறி அவர் விடுவிக்கப்பட்டார். எ முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகஜன் கட்டளையிட சந்தேக நபரை லால் குமார கமகே விடுவித்ததாக சிசிர திசெர தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!