வடகொரிய அதிபரிடம் தனிப்பட்ட அலைபேசி இலக்கத்தைக் கொடுத்த ட்ரம்ப்!

வடகொரிய அதிபரிடம் தனது தனிப்பட்ட அலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன், என டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12ல் நடந்தது. இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் டிவிக்கு அளித்த பேட்டியில், ‘கிம் ஜாங் உன்னுடன் நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. கருத்து வேறுபாடுகளை களைய ஏதுவாக இருந்தது. எனது தனிப்பட்ட அலைபேசி எண்ணை கிம்மிடம் தந்துள்ளேன். சர்வதேச பிரச்சினைகள் உட்பட எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள், என கூறியுள்ளேன். எனவே வட கொரியாவிடம் இருந்து புதிய செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும்” என ட்ரம்ப் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!