மெக்சிகோவில் பற்கள் மற்றும் தலைமுடி பிடுங்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட அமெரிக்க பெண்: வெளியான அதிர்ச்சி தகவல்!

காதலனைத் தேடி மெக்சிகோ சென்ற அமெரிக்க பெண் ஒருவர், வாயில் பற்களும் தலையில் முடியும் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகே உருவான இளம்பெண் Lizbeth Flores (23), ஆகத்து மாதம் 9ஆம் திகதி தன் காதலனைக் காண்பதற்காக மெக்சிகோவுக்கு சென்றார். அன்று மாலையே வீடு திரும்பிவிடுவதாக கூறிச்சென்ற மகள் 10 ஆம் திகதி ஆகியும் வீடு திரும்பாததால் கவலையுற்ற Lizbethஇன் தாய் María Rubio, பொலிசில் புகாரளித்துள்ளார்.

ஆகத்து 11ஆம் திகதி, Lizbeth மெக்சிகோவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொல்லப்படுவதற்கு முன் Lizbeth கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. Lizbeth இன் பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டு, அவரது தலைமுடி தோலுடன் உரிக்கப்பட்டு, பயங்கரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அவரது சடலம்.

அவர் காதலரை சந்தித்தாரா, அவரை கொலை செய்தது யார் என்பது தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், மெக்சிகோவில் இருக்கும் மகளின் உடலை அமெரிக்கா கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் Lizbethஇன் தாய்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!