சுரேனுக்கு தேசிய பட்டியல் வழங்கியதால் சுதந்திர கட்சி கொந்தளிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும்,

“தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது. ஆனால்இஎங்களுடைய பரிந்துரையை புறக்கணித்துவிட்டு, தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொதுஜனபெரமுன அனுப்பியுள்ளது.

எனினும் இவ்விடயம் தொடர்பாக பொதுஜன பெரமுன எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது இரு கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு முரணானது. எனவே நாம் பொதுஜன பெரமுனவின் இத்தகைய செயற்பாடு குறித்து அதிருப்தி அடைந்துள்ளோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!