பிரான்சில் மனைவியின் கண்முன் ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன்: நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்!

பிரான்சில் மனைவி கண்முன்னே கணவர் திருப்பிலியால் நெஞ்சில் குத்தப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின், Vitry-sur-Seine நகரில் இருக்கும், l’avenue du 8 Mai 1945 எனும் வீதியில் கடந்த வியாழக் கிழமை இரவு 39 வயது மதிக்கத்தக்க நபர், தன்னுடைய மனைவியுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று வாகனத்தை மறித்த மர்ம நபர் ஒருவர் மறித்துள்ளார். இதனால் காரில் இருந்து அவர் வெளியேறியவுடனே தான் மறைத்து வைத்திருந்த screwdriver-ஆல் அவரது நெஞ்சில் குத்தியுள்ளார். இது அவரது நெஞ்சில் ஆழமாக பதிந்ததால், இரத்தம் வழிந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன அவரது மனைவி உடனடியாக உதவிக்கு அங்கிருந்தவர்களை அழைத்துள்ளார். ஆனால், அவர் அதற்கு அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். screwdriver-ஆல் குத்திவிட்டு தப்பி ஓடிய அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!