ஈஸ்டர் பயங்கரவாதம்; வீடு தேடி சென்று சிறிசேனவிடம் விசாரணை!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

விஜயராமயில் உள்ள அவரின் இல்லத்திற்கு இன்று (26) காலை சென்ற அதிகாரிகள் தற்போது முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரின் வீட்டிற்கு பொலிஸ் குழு சென்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!