வெள்ளை வான் விவகாரம்; ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை வான் மனிதக் கடத்தல் சாரதிகள் என அறியப்பட்ட இருவரை வைத்து வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ராஜித சேனாரத்ன நடத்திய ஊடக சந்திப்பில் பல விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அது ராஜித சேனாரத்னவின் நாடகம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!