நேற்று 43 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3092ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் குவைட்டில் இருந்து வந்த இந்திய நாட்டவர் 05 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில்,நேற்று மாத்திரம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!