அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ரொமேஷ் தலைமையில் குழு நியமனம்!

20வது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேரை கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரனிகளான காமினி மாரப்பன, மனோஹர சில்வா, சஞ்சீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஏ.சர்வேஸ்வரன், பேராசிரியர் நஜீமா கமுறுடீன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!