கண்டியில வாக்குகளை மீள எண்ண உத்தரவிடக் கோரி வழக்குத் தாக்கல்!

பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணி,முடிவுகளை வெளியிடுமாறு கோரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முதலாம் இலக்க சுயேட்சைக்குழுவில் போட்டியிட்ட மஹசோன் படை என்ற அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உட்பட 19 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.கடந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் போது பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அமீத் வீரசிங்க தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்ததாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!