கோப்பாய் விபத்தில் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி பலி!

கோப்பாய் – பூதர்மடம் பகுதியில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தார்.

கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!