வேலை செய்யாத அமைச்சர்களுக்கு புதிய ஆப்பு? ஜனாதிபதி கோட்டாபய அமைச்சர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு!

அமைச்சர்களின் பணி தொடர்பில் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முறை தாம் பணி செய்யும் நிறுவனம் தொடர்பில் தான் உட்பட அமைச்சர்களிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்று கோரியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பின் பிரதான தபால் நிலைய கண்கானப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தபால் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு புதன் கிழமையும் தன்னை நேரில் சந்திக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!