472 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 472 இலங்கையர்கள் இன்று (11) நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 405 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.02 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேபோன்று கட்டாரிலிருந்து 67 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!