டொரோண்டோவில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

St. Clair Avenue West, Mould Avenue பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அந்த பகுதியில் நின்றவர்களின் சாட்சியத்தின் படி இரண்டு பேர் WallMart வாகனத்தரிப்பிடத்தில் தங்களிடையே ஒரு நிமிடம் வரை வாக்குவாதம் செய்ததாகவும் அதன் பிறகு துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டு சத்தங்களை தொடர்ந்து ஒருவர் காரில் இல் மேற்கு பக்கமாக சென்றதாகவும் மேலும் தெரிவித்தனர். காவல் துறையின் கொலைகளை விசாரிக்கும் அதிகாரிகள் விசாரணைகளை தொடர்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!