புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை: உலகளவில் ஒரேநாளில் இவ்வளவு உயிரிழப்பா!..

சர்வதேச அளவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,07,930 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான நோய் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 5,537 போ் பலியாகியுள்ளனா், இதுவே உலகில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னா், இந்த மாதம் 6-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,06,857 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.9 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சா்வதேச கொரோனா நிலவரத்தைக் கண்காணித்து வரும் ‘வோ்ல்டோமீட்டா்’ இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 9.29 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!