மூத்த குடிமக்கள் வெளியே வரவேண்டாம்!

மூத்த பிரஜைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதில் இருந்து தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சமூகங்களிடையே கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும், ஆபத்து இன்னும் நீங்கவில்லை. மூத்த குடிமக்களும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே வர வேண்டும் . சமூக இடைவெளியை உறுதி செய்வதன் மூலம் பொதுமக்கள் புதிய இயல்பை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!