20ம் திருத்த சட்டமூலம் 22ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் 22ம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது முதலாம் வாசிப்புக்கென நீதி அமைச்சரால் குறித்த சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்துவதற்கு ஏழு நாட்கள் வழங்கப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!