மஞ்சளை விடுவித்த சுங்க அதிகாரிகள் கைது!

33 ஆயிரம் கிலோ மஞ்சள் சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றப்பட்டது தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சளுடன் மூன்று கொள்கலன்களும் மூன்றாயிரம் கிலோ உளுந்துடன் 7 லொறிகளும் நேற்றுமுன்தினம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டிருநதது.

புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் வாகன தரிப்பிடம் ஒன்றில் சுமார் 40 அடி நீளம் கொண்ட மூன்று கொள்கலன்களில் குறித்த மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 10 பேர் புளுமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டவிரோத மஞ்சள் மற்றும் ஏனைய பொருட்கள் டுபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னால் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மட்டக்குளி பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரால் குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!