ஒன்ராறியோவில் ட்ரோனுடன் போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞன்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஒன்ராறியோவில் சந்தேகத்துக்குரியவகையில் ட்ரோனுடன் ஒருவர் சிக்கிய நிலையில், அவரிடம் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. Napaneeயிலுள்ள சிறைக்கருகில் அந்த 20 வயது நபர் சிக்கினார். சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவர் நடமாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அப்போது, அவரிடம் ஒரு பெரிய ட்ரோனும், பெருமளவில் புகையிலை மற்றும் கஞ்சாவும் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த ட்ரோனை பயன்படுத்தி போதைப்பொருட்களை சிறைக்குள் கடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒன்ராறியோவின் Loyalist Township பகுதியைச் சேர்ந்த அந்த நபரை கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது விநியோகிக்கும் நோக்கில் கஞ்சா வைத்திருந்ததாகவும், அத்து மீறி தனியார் இடத்துக்குள் நுழைந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!