கஜேந்திரகுமார், கஜேந்திரனுக்கு மன்றில் முன்னிலையாக உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரை நடைபணயத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

நடைபயணத்தை ஏற்பாடு செய்தமைக்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜானுஜன் ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி வவுனியாநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!