இந்திய எண்ணெய் கப்பலில் ஏறிய ஐவரும், குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கும் சென்றமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தை சேர்ந்த ஐந்து ஊழியர்களையும் குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக கொரோனா நடவடிக்கை செயலணியின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

மருத்துவர் உட்பட ஐந்து பேரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான அனைத்து உரிய நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தவேளை உரிய செயற்பாடுகளுக்காக துறைமுக பணியாளர்கள் கப்பலிற்குள் சென்றனர் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து அவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!