பதிவு செய்யப்படாத கைபேசிகளின் சிம்கள் இனி இரத்தாகும்!

பதிவு செய்யப்படாத கைபேசிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் அட்டைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படும் என்று இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கைபேசிகளை கொண்டு வந்தவர்கள் அவற்றை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யுமாறும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தரமற்ற கைபேசிகள் இறக்குமதியாவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை எந்தவொரு கைபேசியினதும் 15 இலக்க ஐ.ம்.ஈ.ஐ (IMEI) எண்ணை 1909 என்ற எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்புவதனூடாக பதிவினை சரிபார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!