மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள் வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் குறித்த மனுக்கள் மீதான பரீசிலனை மீண்டும் திங்கட் கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!