அதிகாரிகளை குழப்பும் கேள்வி?

திவுலப்பிட்டியவைச் சேர்ந்த பெண்ணுக்கு தொற்று எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, தெரிவித்துள்ளார்.

“குறித்த பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை, இந்த நிமிடம் வரை, அவருக்கு தொற்று ஏற்பட்ட மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அனாலும் அதனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அண்மைய நாட்களில் திவுலப்பிட்டிய மற்றும் மனுவங்கொட பகுதிகளுக்கு சென்றவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும், அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!