மன்னாரில் ஒருவருக்கு கொரோனா!

நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 186 பேருக்கு கொரோனா பரிசோதனை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

மத நிறுவனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!