தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் விடுவிப்பு!

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகள், நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த மூன்று நாட்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்படுவதாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!