இந்திய தூதரக பணியாளருக்கு கொரோனா!

கொழும்பில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது அவர் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஊழியரின் பணி காரணமாக அவர் தூதரக அலுவலகத்துடனும் அதிகாரிகளுடனும் சிறியளவிற்கே தொடர்பிலிருந்தார் என தெரிவித்துள்ள தூதரகம் அவருடன் தொடர்பிலிருந்த மிககுறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவாகி வந்த சூழ்நிலை காரணமாக தூதரகம் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான ஊழியர்களுடனேயே சில வாரங்களாக இயங்கிவந்துள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!