அதிகரித்த தொற்று நெருக்கடிக்குள் இலங்கை! 63,663 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதற்காக 63,663 பேர் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். கோவிட் – 19 பரவுவதை தடுப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் இதை தெரிவித்துள்ளது.

அவர்கள் கடந்த 30 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் 35 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 1,082 இன்று வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!