கனடாவில் ஒரே நேரத்தில் பற்றி எரிந்த இரு தேவாலயங்கள்!

கனடாவில், ஒரே நேரத்தில் இரண்டு தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்களில் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தீப்பற்றியுள்ளது. கண் முன்னே தங்கள் தேவாலயம் தீப்பற்றி எரிவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணீர் மல்க நின்றுள்ளனர் அப்பகுதி மக்கள்.

இந்நிலையில், பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக கான்ஸ்டபிள் Kevin Howe என்பவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் அருகருகே உள்ள இரண்டு தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ள விடயம் நிச்சயம் சந்தேகத்துக்குரியதுதான் என்று கூறியுள்ளார் அவர், தேவாலயங்கள் சமுதாயத்தின் மைய அம்சம் என்று கூறிய அவர், அதனால் இவ்வளவு சேதம் என்றெல்லாம் வெறும் வார்த்தைகளால் கூறிவிடமுடியாது என்கிறார்.

இந்த சம்பவம் மக்களிடையே உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் Kevin Howe.

அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லையென்றாலும், ஒரு தேவாலயம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!