பேலியகொட கொத்தணியில் நேற்றும் 356 பேர்!

நாட்டில் நேற்று 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,800ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!