போகம்பரை சிறைக் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்!

கண்டி – பழைய போகம்பரை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இன்று (12) காலை முதலகூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்யக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

800 கைதிகள் உள்ள இந்த சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!